December 12, 2010

காயப்பட்ட இதயத்தின் கண்ணீர் வரிகள்.....

என் இதயம் இரும்பாக தான் இருந்தது 
உன் நேசம் காந்தமாக என்னை கவரும் வரை .....

வறண்ட நிலமாக தான் இருந்தது
நீ மழையாய் என்னுள் விழும் வரை .....

சாதகப் பறவை போன்று சுற்றி திரிந்தேன்
இன்னிசையாய் நீ என் வாழ்வில் வரும் வரை.....

குளிர் காற்றாய் நீ என் மீது பாயும் போது
குளிர்ந்து போனது என் இதயம் ....

இன்றோ அந்த இனிமை நிறைந்த தென்றலை எண்ணி 
கண்ணீர் வடிகின்றது என் இதயம் ...

காலம் முழுதும் கண் விழித்து காத்திருப்பேன்
நாம் காவியம் படைக்கும் வரை ......!

1 comment: