August 28, 2017

தீ பந்தம்

என் கண்ணீரைகேக்கத்தான்
நாதியில்லை ஊருக்குள்ள
உங்கிட்ட கொஞ்சம் சொல்றேன்
காதுகொடுத்து கேளுமய்யா..

உச்சாணி கொண்டையில
உஷ்ணத்தை வெச்சிருக்கேன்
ஊருக்குள்ள ஒண்ணுன்னா
உனக்குமுன்ன நானும்வாரேன்
நல்லதென்ன கெட்டதென்ன
நடுநிலைய இருக்கமாட்டேன்
உதவின்னு கேட்டுபுட்டா
உசுரையும் தந்திடுவேன்
பச்சைத்தண்ணி பாத்தபோதும்
பயத்துல நான் நடுங்க
படுபாவிமக்க யாரும்
இங்க என்ன புரிஞ்சுக்கல..

நேத்து வந்த கிராதகிக்கு
பல்லிளிச்சு பாத்தீங்களே
தேவைக்கு என்ன நிறுத்திப்புட்டு
தேவதைனு அவகிட்ட போறீங்களே
கட்டையில போறப்போ
அவ கூட சாவாமட்ட
கடைசிவரை நான் வந்து
என் உசுரையும் தந்திடுவேன்
முறைக்காக வெச்சாலும்
மனசார பாத்திடப்பா
அப்போதான் என் கட்டை
முழுசாதான் எரியுமப்பா...

சேரி சாவுக்கு நேரமாச்சு
நான் இப்போ போகோணும்
பந்தமெங்க பந்தமெங்கனு
கவலை குரல்கேக்குதப்பா.. !!

இப்படிக்கு "தீ பந்தம்"

- சுகி

August 23, 2017

காதல் சுரப்பியா ? காதல் உணர்ச்சியா ?

காதல் என்றால்
என்னவென்று தெரியாத 
ஆய்வுக்கூடங்கள் பல இருக்க ..
அரைநொடி பார்வையில் 
அனைத்தையும் புகுத்திடும்
மாயை இந்த காதல் !

கள்ளமில்லா கன்னிக்கும்

அவள் கதை தொடுத்த காவியனுக்கும்
கொஞ்சம் கொஞ்சமாய் 
எரிமலையாய் 
கக்கும் இந்த உணர்வுகளுக்கு 
உயிரே இந்த காதல் !

நெடுநாள் பழக்கமோ 

முன்ஜென்ம தொடர்போ
இல்லை 
பார்த்ததும் படர்ந்ததோ
ஏதவாயிருப்பின் 
முரணின்றி மேடைபோட்டு 
முத்தார சிரிக்கிறது 
இந்த காதல் ! 

உறவுகளை உடைத்து,

உணர்வுகளை தொடுத்து,
உடைமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்தது தான் 
இந்த காதல் !!

காதல் முழுதாய் 

உணர்ச்சியால் முகம்காட்ட 
சுரப்பிகள் மறந்து 
உணர்வுகள் பிறந்து 
சூட்சமாய் சொல்லினிக்க
செவுடனுக்கும் ஒலிகேக்கும் 
குருடனுக்கு விழிகிடைக்கும்..

காதல் பூப்போலே 

உணரத்தான் தொடவேண்டும் 
நுகரத்தான் மனம்வேண்டும்

சுரபிவழி வந்திருந்தால் 

முடிவில்லா காதலுக்கும் 
முதுமையிலே பிறப்பேது ?
முகம்பார்த்து மலர்வதுக்கும்
சுரபியிலே கெடுவுமுண்டு..

உணர்ச்சிபால் வரும்காதல் 

உடல்பார்த்து வருவதில்லை 
உணர்வோடு உருக்குலைந்து 
ஊக்கமதில் வாழ்வதுண்டு..

பிள்ளையாருக்கு பிறந்தநாள்


பிள்ளையாரே பிள்ளையாரே
பிறந்தநாளாம் உமக்குஇன்னிக்கு
முதல் கடவுள் முகத்தானே
முதல் வாழ்த்து நானும் சொல்லேன்

எருக்கம்பூ நாயகனே
இரக்கம் கொஞ்சம் காட்டுமய்யா
எழுத்துப்பிழை கூடாதுனு
சுழி போட்டு துவங்க போறேன்

புத்தாடை போடணுமுன்னு
பட்டாடை கேப்பீரோ
பலவண்ண மெழுகேத்தி
பகட்டா தான் மகிழ்வீரோ

கரிமுகத்து கணபதியே
கடைதிறக்க வாரீரோ
நான்செஞ்ச தின்பண்டம்
திகட்டும் வரை உண்பீரோ

உப்பென்ன இனிப்பென்ன
விதவிதமா உங்கத்தாரேன்
கொலு கொலு புள்ளைக்கு
கொழுக்கட்டை புடிச்சு தாரேன்

கனியுண்ணும் ஆசையிலே ஆறுமுகனை
மலையேத்திய ஐந்து கரத்தானே
பால்கனி படைச்சிருக்கேன்
பானைவயிறு நிரம்பும்வரை வயிறார உண்ணும்மய்யா

முருகனுக்கு மூத்தோனே
முரண்டுபிடிக்காம வாருமய்யா
நீ போட்ட முடியெல்லாம்
நீக்கத்தான் வேணும்மய்யா

சதுர்த்தி நாயகனே
சங்கடத்தை தீர்க்கத்தான் நீயும் இங்கு வாரீரோ
சங்கத்தமிழ் வளர்த்த மண்ணில்
செம்மொழி செழிக்க செய்வீரோ

- சுகி