என் கண்ணீரைகேக்கத்தான்
நாதியில்லை ஊருக்குள்ள
உங்கிட்ட கொஞ்சம் சொல்றேன்
காதுகொடுத்து கேளுமய்யா..
நாதியில்லை ஊருக்குள்ள
உங்கிட்ட கொஞ்சம் சொல்றேன்
காதுகொடுத்து கேளுமய்யா..
உச்சாணி கொண்டையில
உஷ்ணத்தை வெச்சிருக்கேன்
ஊருக்குள்ள ஒண்ணுன்னா
உனக்குமுன்ன நானும்வாரேன்
நல்லதென்ன கெட்டதென்ன
நடுநிலைய இருக்கமாட்டேன்
உதவின்னு கேட்டுபுட்டா
உசுரையும் தந்திடுவேன்
பச்சைத்தண்ணி பாத்தபோதும்
பயத்துல நான் நடுங்க
படுபாவிமக்க யாரும்
இங்க என்ன புரிஞ்சுக்கல..
உஷ்ணத்தை வெச்சிருக்கேன்
ஊருக்குள்ள ஒண்ணுன்னா
உனக்குமுன்ன நானும்வாரேன்
நல்லதென்ன கெட்டதென்ன
நடுநிலைய இருக்கமாட்டேன்
உதவின்னு கேட்டுபுட்டா
உசுரையும் தந்திடுவேன்
பச்சைத்தண்ணி பாத்தபோதும்
பயத்துல நான் நடுங்க
படுபாவிமக்க யாரும்
இங்க என்ன புரிஞ்சுக்கல..
நேத்து வந்த கிராதகிக்கு
பல்லிளிச்சு பாத்தீங்களே
தேவைக்கு என்ன நிறுத்திப்புட்டு
தேவதைனு அவகிட்ட போறீங்களே
கட்டையில போறப்போ
அவ கூட சாவாமட்ட
கடைசிவரை நான் வந்து
என் உசுரையும் தந்திடுவேன்
முறைக்காக வெச்சாலும்
மனசார பாத்திடப்பா
அப்போதான் என் கட்டை
முழுசாதான் எரியுமப்பா...
பல்லிளிச்சு பாத்தீங்களே
தேவைக்கு என்ன நிறுத்திப்புட்டு
தேவதைனு அவகிட்ட போறீங்களே
கட்டையில போறப்போ
அவ கூட சாவாமட்ட
கடைசிவரை நான் வந்து
என் உசுரையும் தந்திடுவேன்
முறைக்காக வெச்சாலும்
மனசார பாத்திடப்பா
அப்போதான் என் கட்டை
முழுசாதான் எரியுமப்பா...
சேரி சாவுக்கு நேரமாச்சு
நான் இப்போ போகோணும்
பந்தமெங்க பந்தமெங்கனு
கவலை குரல்கேக்குதப்பா.. !!
நான் இப்போ போகோணும்
பந்தமெங்க பந்தமெங்கனு
கவலை குரல்கேக்குதப்பா.. !!
இப்படிக்கு "தீ பந்தம்"
- சுகி
