August 23, 2017

காதல் சுரப்பியா ? காதல் உணர்ச்சியா ?

காதல் என்றால்
என்னவென்று தெரியாத 
ஆய்வுக்கூடங்கள் பல இருக்க ..
அரைநொடி பார்வையில் 
அனைத்தையும் புகுத்திடும்
மாயை இந்த காதல் !

கள்ளமில்லா கன்னிக்கும்

அவள் கதை தொடுத்த காவியனுக்கும்
கொஞ்சம் கொஞ்சமாய் 
எரிமலையாய் 
கக்கும் இந்த உணர்வுகளுக்கு 
உயிரே இந்த காதல் !

நெடுநாள் பழக்கமோ 

முன்ஜென்ம தொடர்போ
இல்லை 
பார்த்ததும் படர்ந்ததோ
ஏதவாயிருப்பின் 
முரணின்றி மேடைபோட்டு 
முத்தார சிரிக்கிறது 
இந்த காதல் ! 

உறவுகளை உடைத்து,

உணர்வுகளை தொடுத்து,
உடைமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்தது தான் 
இந்த காதல் !!

காதல் முழுதாய் 

உணர்ச்சியால் முகம்காட்ட 
சுரப்பிகள் மறந்து 
உணர்வுகள் பிறந்து 
சூட்சமாய் சொல்லினிக்க
செவுடனுக்கும் ஒலிகேக்கும் 
குருடனுக்கு விழிகிடைக்கும்..

காதல் பூப்போலே 

உணரத்தான் தொடவேண்டும் 
நுகரத்தான் மனம்வேண்டும்

சுரபிவழி வந்திருந்தால் 

முடிவில்லா காதலுக்கும் 
முதுமையிலே பிறப்பேது ?
முகம்பார்த்து மலர்வதுக்கும்
சுரபியிலே கெடுவுமுண்டு..

உணர்ச்சிபால் வரும்காதல் 

உடல்பார்த்து வருவதில்லை 
உணர்வோடு உருக்குலைந்து 
ஊக்கமதில் வாழ்வதுண்டு..

No comments:

Post a Comment