October 14, 2011

காதல் ஹைக்கூ


நித்தமும் உன்னுடன் வாழ்கிறேன்..
உயிரிலே கலந்த காற்றாய்
நீ என்னுள் சூழ்ந்து கொண்ட நொடி தோறும் ...

மணமேடை மனவாசகம்


இராபகல் பாராது 
இமை பொழுதும் உன்னை எண்ணும் 
என் இதயத்துக்கு இன்னும் ஓர் ஆசை ...


அளவில்லா அன்பின் கடலில்
நித்தமும் வாழ்ந்தாலும் 
சிறு பொழுதேனும் 
உன் கை விரல் இணைப்பின் 
பிரியாமல் வாழ வேண்டும் என்று ...

காத்திருக்கிறேன் 
உன்னோடு கைகோர்த்து 
உலா வரும் அந்த ஒரு நொடிக்காக...!!

காதல்


உன் நினைவுகள் 
ரணமாய் என்னை தீண்டினாலும் 
என் கண்கள் 
பல நாட்களாய் காத்திருக்கிறது
உன் வருகைக்காக...