February 16, 2011

வலி


மனதில் பல வலிகள் இருந்தாலும்...
புன்னகை என்ற ஒரு பூவாள் 
மறைக்கும் சக்தி இருப்பதால் தானோ ..
மேலும் துன்பங்கள்
இன்பமாய் என்னை அடைகிறது...
வலிகளின் வாழ்விடம் நான் என்று

February 12, 2011

என் இனிய நட்பாக....

குறுஞ் செய்தியால்

மனம் நிரப்பும்

வித்தைக் கற்றவளே...

வார்த்தைகளில்

உன் உருவம் செதுக்கும்

உத்தமச் சிற்பியே...

அள்ளக் குறையாத

அன்பைச் சுரக்கும்

நட்பெனும்

அட்சயப் பாத்திரத்தில்

ஆண்பெண் எனும்

வேற்றுமை குறியீடு களைந்து

மதவாத சாதீய

மாச்சர்யங்கள் மறந்து

கரும்பில் இனிப்பாய்

கடலில் உப்பாய்

கலந்தோம் ஒன்றாய்...

வாழ்வு முழுதும்

நீடிக்கும் நட்பால்-நம்

வாழ்நாளே நீடிக்கும்..

உன் வார்த்தை சுமந்த

காற்றலைகூட

கண்ணீர் துடைக்கும் !

தவமாய் பெற்ற உன்னை

காலம் முழுவதும் காத்திருப்பேன்

என் இனிய நட்பாக....

காதல்

கல்லறை கூட அழகு தான்
உண்மையான காதல்
அமைதியாய் உறங்கும் போது

புத்தாண்டு வாழ்த்துக்கள்


கடந்த வருடக் கவலைகள் யாவும்
கலைந்தே போகட்டும்..
வலியும் ரணமும் வாழ்க்கை என்ற
வார்த்தை மாறட்டும்..
மரத்துப் போன மனங்களில் கொஞ்சம்
ஈரம் துளிர்க்கட்டும்..
பட்டுப் போன இதயம் முழுதும்
பசுமை படரட்டும்..
புதிதாய் பிறக்கும் வருடம் நமக்கு
வசந்தம் வழங்கட்டும்...
எல்லாச் செயலும்
வெற்றி என்னும் இமயம் காணட்டும்..
வசந்தமும் வெற்றியும்
வாழ்நாள் முழுக்க
நம்மோடு கலந்தே இருக்கட்டும்....!

வேதனை

வலிகளும் வேதனையும் 
தொடரும் போது
வார்த்தைகள் கூட தடுமாறும் ..
பாசத்தின் நடுவே
பிளவுகள் வந்தால்
சில பிழைகள் கூட 
பிரிவாகும்....

நட்பு

நொடிகளில் தொடங்கி..
வருடங்கள் சென்றாலும் ..
மாறாமல் மலர்ந்திருக்கும் ...
மங்காமல் பெருகி இருக்கும்
நம் நட்பு ..