October 19, 2016

நா முத்துக்குமார்

மெய் மறந்து தான் போயிருந்தேன்
உன் பாடல் வரிகள்
ஒவ்வொன்றிலும்...
உவமைகளை அழகாய் கோர்த்து
உணர்வுகளை வார்த்தையால் இணைத்து
உறவுகளை ஒன்றிணைத்தாய்...
நீ சொன்ன கவியாவும்
நங்கூரமாய் எங்கள் மனதில்...
வலியாய் நீ மறைந்தாலும்
வார்த்தைகளால் என்றும் வாழ்வாய் எங்கள் நினைவுகளில்...

அவள்

கருவாய் உயிர் பெற்ற
நாள் தொடங்கி
கல்லறை உறக்கம் காணும் வரை
கண்ணீரையும்
கலக்கத்தையும் நிறைவாய்
கொண்டவள் இவள்...
பிஞ்சாய்
பிறந்த நாள் தோறும்
பெண் பிள்ளை தூற்றலை
பெற்றவள் இவள்...
கள்ளமில்லா சிரிப்பிலும்
கால் கொலுசு சத்தத்திலும்
பெற்றவளை
மகிழ்விற்கும் மழலை இவள்...
காலத்தின் ஓட்டத்தில்
மழலையில் இருந்து மங்கையாய்
மலர் சூடிய மலை நாட்டு இளவரசி இவள். . .
பருவங்கள் மாற மாற
உணர்வுகளின் உபாதைகளாய்
உடலிலும் மனதிலும்
மாற்றங்கள் வெளிபட
கலைப்பற்று வாடும் பூமகள் இவள்...
வரமாய் பெற்ற கர்ப்பகத்தை
வலியால் உணர்ந்தும்
மனதால் மெலிந்தும்
பொறுத்து கொள்ளும் பூமாதேவி இவள். . .
மணம் கொண்ட மணாளனுக்கு
மலராய் பூத்தும்
வாழவந்த வீட்டிற்கு பூ மணத்
தென்றலாய் வீசும்
வசந்தம் இவள். . .
போற்றலும் தூற்றலும்
எதுவாயிருப்பின்
பெண்ணாய் பிறந்த பிறவிபலனை
கருவாய்
சுமக்கும் அன்னை இவள். . .
பன்முக
பராசக்தியாய்
பல பாவனைகள் கொண்ட
இத்தனை இவள்களும்
ஒரு உயிராய்
இருக்கிறாள்
அவள் என்ற தோற்றத்தில். . .

மொழி

'சேறு' என்ற வார்த்தையை உருவாக்கி, 
அதில் 
"கால்" வைத்தால் தான் 
'சோறு' ஆகும்
எனும் நுட்பமான மொழி
'தமிழ்' ! :)

October 17, 2016

நட்புக்குள்ளே...


அன்புக்கு பாத்திகட்டி
அசைவில்லா நட்புக்கு
வேரூன்றி நீயும் நின்றாய்
நான் போடும் பாதைகளுக்கு பகட்டிரவிலும் பளிச்சிட்ட வெளிச்சமாய்
பல தூரம் நீ நடந்தாய்...

நட்பெனும் அதிகாரத்தில்
'அ'கரமாய் நிலைத்தும்
ஆழ்கடல் ஆழத்தில்
அகதியாய் தொலைந்தும்
நம்பிக்கைக்கு வித்தாய் இருந்த நம் நட்பு...

அகண்டமாய் விரிந்த
உன் நட்புலகில் அரிதாய் மாற
கண் சிமிட்டும் நேரத்தில் வேற்றுவனாய் நிறுத்திவிட்டாய்...

நட்புக்கு இலக்கணமாய்
நம்பிக்கையாய் நானிருக்க
வார்த்தைகளால் சுட்டெரித்தாய்
வலி மாறா வடு இது தான் என்று
அறிவுக்கும் புகட்டிவிட்டாய்...

புன்னகையுடன் பயணிக்கிறேன்
என் வழி நடுவே
காத்திருக்கும் முற்களை
புஷ்பங்களாக பார்த்திட...

கடலை சட்னி

கருமணல் காட்டுக்குள்ளே
கொத்து கொத்தாய் விளைஞ்ச முத்து..
கருப்புச் சட்டி வாணலியில்
ஊர் மணக்க தாளமிட..
கொப்பரக்காய் கொரகொரப்பு
கொஞ்சம் வந்து நா சுவைக்க..
காரமாய் நீ சேர்த்த
வற்றல் எல்லாம் வாய் எரிக்க..
அத்தை மகள் நீ வந்து
இலை போட்டு பரிமாற..
உன் கை பட்ட கடலை சட்னி
நாவில் பட்டு மெய் மறக்க
தடம் பார்த்து காத்திருந்தேன்
இன்னும் ஒரு இட்லிக்காக...

Image may contain: one or more people