கருவாய் உயிர் பெற்ற
நாள் தொடங்கி
கல்லறை உறக்கம் காணும் வரை
கண்ணீரையும்
கலக்கத்தையும் நிறைவாய்
கொண்டவள் இவள்...
பிஞ்சாய்
பிறந்த நாள் தோறும்
பெண் பிள்ளை தூற்றலை
பெற்றவள் இவள்...
நாள் தொடங்கி
கல்லறை உறக்கம் காணும் வரை
கண்ணீரையும்
கலக்கத்தையும் நிறைவாய்
கொண்டவள் இவள்...
பிஞ்சாய்
பிறந்த நாள் தோறும்
பெண் பிள்ளை தூற்றலை
பெற்றவள் இவள்...
கள்ளமில்லா சிரிப்பிலும்
கால் கொலுசு சத்தத்திலும்
பெற்றவளை
மகிழ்விற்கும் மழலை இவள்...
காலத்தின் ஓட்டத்தில்
மழலையில் இருந்து மங்கையாய்
மலர் சூடிய மலை நாட்டு இளவரசி இவள். . .
கால் கொலுசு சத்தத்திலும்
பெற்றவளை
மகிழ்விற்கும் மழலை இவள்...
காலத்தின் ஓட்டத்தில்
மழலையில் இருந்து மங்கையாய்
மலர் சூடிய மலை நாட்டு இளவரசி இவள். . .
பருவங்கள் மாற மாற
உணர்வுகளின் உபாதைகளாய்
உடலிலும் மனதிலும்
மாற்றங்கள் வெளிபட
கலைப்பற்று வாடும் பூமகள் இவள்...
உணர்வுகளின் உபாதைகளாய்
உடலிலும் மனதிலும்
மாற்றங்கள் வெளிபட
கலைப்பற்று வாடும் பூமகள் இவள்...
வரமாய் பெற்ற கர்ப்பகத்தை
வலியால் உணர்ந்தும்
மனதால் மெலிந்தும்
பொறுத்து கொள்ளும் பூமாதேவி இவள். . .
வலியால் உணர்ந்தும்
மனதால் மெலிந்தும்
பொறுத்து கொள்ளும் பூமாதேவி இவள். . .
மணம் கொண்ட மணாளனுக்கு
மலராய் பூத்தும்
வாழவந்த வீட்டிற்கு பூ மணத்
தென்றலாய் வீசும்
வசந்தம் இவள். . .
மலராய் பூத்தும்
வாழவந்த வீட்டிற்கு பூ மணத்
தென்றலாய் வீசும்
வசந்தம் இவள். . .
போற்றலும் தூற்றலும்
எதுவாயிருப்பின்
பெண்ணாய் பிறந்த பிறவிபலனை
கருவாய்
சுமக்கும் அன்னை இவள். . .
எதுவாயிருப்பின்
பெண்ணாய் பிறந்த பிறவிபலனை
கருவாய்
சுமக்கும் அன்னை இவள். . .
பன்முக
பராசக்தியாய்
பல பாவனைகள் கொண்ட
இத்தனை இவள்களும்
ஒரு உயிராய்
இருக்கிறாள்
அவள் என்ற தோற்றத்தில். . .
பராசக்தியாய்
பல பாவனைகள் கொண்ட
இத்தனை இவள்களும்
ஒரு உயிராய்
இருக்கிறாள்
அவள் என்ற தோற்றத்தில். . .
No comments:
Post a Comment