October 19, 2016

நா முத்துக்குமார்

மெய் மறந்து தான் போயிருந்தேன்
உன் பாடல் வரிகள்
ஒவ்வொன்றிலும்...
உவமைகளை அழகாய் கோர்த்து
உணர்வுகளை வார்த்தையால் இணைத்து
உறவுகளை ஒன்றிணைத்தாய்...
நீ சொன்ன கவியாவும்
நங்கூரமாய் எங்கள் மனதில்...
வலியாய் நீ மறைந்தாலும்
வார்த்தைகளால் என்றும் வாழ்வாய் எங்கள் நினைவுகளில்...

No comments:

Post a Comment