May 25, 2017

**மழைக்கொரு விண்ணப்பம்**

அக்னி தேவனை அரவணைக்க
அன்பாக வந்தாயோ.. இல்லை
அல்லல்படும் மக்களுக்கு 
அமிர்தமாய் வந்தாயோ..
சுட்டெரிக்கும் சூரியனுக்கு
சுடரேற்ற வந்தாயோ.. இல்லை
சருகாய் மடியும் சமானியனின்
சந்தோஷமாய் வந்தாயோ..
பளிச்சன்று பல்லை காட்டும்
பகலவனுக்கு பன்னீராய் வந்தாயோ.. இல்லை
பசுமை மைந்தர்களின் கண்ணீருக்கு
பால் வார்க்க வந்தாயோ..
விடியுமுன் விளையாட்டாயின்றி
வரவேற்பாய் வந்துவிடு..
துவண்டு போன உயிர்களுக்கு
துளியாய் வந்து புத்துயிராய் மாறிவிடு..
களம் காணும் உழவனுக்கு
கஞ்சி ஊற்றவாவது கண்ணீர் விடு..
காலம் கடந்தும் காத்திருக்கும் எங்களுக்கு
கருணையோடு விடைக்கொடு..

No comments:

Post a Comment