முன்னோரு சொன்னாங்கனு
மூத்த மக விசேஷத்தை
மூணு ஊரு கூட்டிவந்து
கண்ணாலம் பேசிப்புட்டு
முழுசா வளர்ந்த மக
மூக்கு சிந்தாம வாழணுமுன்னு
மூணு கல்லு தோடு ஒன்ன
மூணாம் மாசம் வாங்கி வந்து
முன்கோபம் வந்தாலும்
முரட்டு அடி பட்டாலும்
முந்தானை மனுஷன்கிட்ட
முந்தியடிக்க வேணாமுன்னு
நான் வளர்த்த செல்லக்கண்ணுக்கு
"மூக்குத்தி" நானும் தாரேன்
மூக்கணாம்கயிறாட்ட
கோவமெல்லாம் அடக்கிகிட்டு
மூச்சுடமா வாழு தாயி..
மூத்த மக விசேஷத்தை
மூணு ஊரு கூட்டிவந்து
கண்ணாலம் பேசிப்புட்டு
முழுசா வளர்ந்த மக
மூக்கு சிந்தாம வாழணுமுன்னு
மூணு கல்லு தோடு ஒன்ன
மூணாம் மாசம் வாங்கி வந்து
முன்கோபம் வந்தாலும்
முரட்டு அடி பட்டாலும்
முந்தானை மனுஷன்கிட்ட
முந்தியடிக்க வேணாமுன்னு
நான் வளர்த்த செல்லக்கண்ணுக்கு
"மூக்குத்தி" நானும் தாரேன்
மூக்கணாம்கயிறாட்ட
கோவமெல்லாம் அடக்கிகிட்டு
மூச்சுடமா வாழு தாயி..
-சுகி

No comments:
Post a Comment