March 8, 2012

கலைந்து போன என் தூக்கத்தின் நினைவுகள்


கலைந்து போன என் தூக்கத்திற்கு
காரணம் அறிய விழிகின்றேன்
காதல் கனவு என்றால்
கதை பேசி தீர்திடுவேன்
கவலைகள் மலையாய் நிறைந்தால் கூட 
கண்ணீரில் கரைதிருப்பேன்
மௌனங்கள் மொழியாகி 
உணர்வுகளை வழிநடத்த
மலரும் நினைவுகள் 
என்னுள் சிறகை விரித்து பறப்பதை கண்டு 
கண் முன்னே மேடையிட்டு கனா காண்கிறேன் நான் 

கவிதை


சந்தோஷம் சங்கடம் 
இரண்டிலும் என்னை விட்டு 
பிரிந்து செல்லாத செல்ல குழந்தை நீ

என்னுள் எழுந்த குழப்பங்களுக்கு 
பல விதத்தில் ஆறுதல் சொல்லி
தோள் குடுத்த தோழி நீ

கண்கள் கலங்கி நிலையற்று நின்ற போதும் 
நிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போட
கற்று தந்த அன்னை நீ

ஒவ்வொரு கவிஞன்
வாழ்விலும் நினைவிலும் வாழும் 
கவி என்னும் கரு நீ

கவிதையே 
இது கவி பாடும் பறவைகளின் 
அன்பு சமர்ப்பணம்.

கவிதையின் பிறப்பு

வான் முழுவதும்
நட்சத்திரக் கூட்டம்
பௌர்ணமி நிலவின் வெளிச்சம்
ஜில்லென்று வீசும் பூங்காற்று 
கண்களுக்கு அழகாய்
புன்னகை பூத்த சிரிப்பில் நான் 
காதல் பாடும் கீதங்களுக்கு 
ராகம் கூட்டும் என் மொழி எழுத்துகள் 
கவிதை எழுதும் சுழல் என்று 
பிடித்தவை என்னை சூழ்ந்து கொண்டாலும் 
என் கவியின் கருவாய்
பிடித்தவர்களும் என்னுடன் நினைவில் !!

பிரிவின் ஏக்கம்

முற்றிலும் தனிமை
முதுமையின் நிலைமை 
முழுவதாய் உணர்கிறேன் நான் இன்று
உறவென்று நீ
என் அருகினில் இல்லாத நாள்தோறும்