சந்தோஷம் சங்கடம்
இரண்டிலும் என்னை விட்டு
பிரிந்து செல்லாத செல்ல குழந்தை நீ
என்னுள் எழுந்த குழப்பங்களுக்கு
பல விதத்தில் ஆறுதல் சொல்லி
தோள் குடுத்த தோழி நீ
கண்கள் கலங்கி நிலையற்று நின்ற போதும்
நிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போட
கற்று தந்த அன்னை நீ
ஒவ்வொரு கவிஞன்
வாழ்விலும் நினைவிலும் வாழும்
கவி என்னும் கரு நீ
கவிதையே
இது கவி பாடும் பறவைகளின்
அன்பு சமர்ப்பணம்.
No comments:
Post a Comment