வெஞ்சொனின் வெப்பத்தில்
வெண்ணிறாடை மெய்யிங்கு
கரும்பலகை போட்டுவிட
கற்றாழை பயனில்லை
கம்பங்கூழும் குளிரவில்லை
கால்கடுக்க நடந்தாலும்
கார்மேகம் காணவில்லை
முப்பகலாய் நீ வந்து
முழுவதுமாய் தகதகக்க
முதிர் நிலவாய் நான் மாறேன்
கதிரவனுக்கும் கருணையுண்டு
கார்மேகத்தில் மறைவதுண்டு
கிடைகண்ட கிழங்களுக்கும்
தப்பிக்க வழியுமுண்டு
வகைவகையாய் கவிப்பாடி
வெண்ணிலவை ரசிக்கும் நாமோ
இன்று
வெயிலை ரசிக்க மறுப்பதேனோ ?!!
- சுகி
No comments:
Post a Comment