October 17, 2016

கடலை சட்னி

கருமணல் காட்டுக்குள்ளே
கொத்து கொத்தாய் விளைஞ்ச முத்து..
கருப்புச் சட்டி வாணலியில்
ஊர் மணக்க தாளமிட..
கொப்பரக்காய் கொரகொரப்பு
கொஞ்சம் வந்து நா சுவைக்க..
காரமாய் நீ சேர்த்த
வற்றல் எல்லாம் வாய் எரிக்க..
அத்தை மகள் நீ வந்து
இலை போட்டு பரிமாற..
உன் கை பட்ட கடலை சட்னி
நாவில் பட்டு மெய் மறக்க
தடம் பார்த்து காத்திருந்தேன்
இன்னும் ஒரு இட்லிக்காக...

Image may contain: one or more people

No comments:

Post a Comment