அன்புக்கு பாத்திகட்டி
அசைவில்லா நட்புக்கு
வேரூன்றி நீயும் நின்றாய்
நான் போடும் பாதைகளுக்கு பகட்டிரவிலும் பளிச்சிட்ட வெளிச்சமாய்
பல தூரம் நீ நடந்தாய்...
நட்பெனும் அதிகாரத்தில்
'அ'கரமாய் நிலைத்தும்
ஆழ்கடல் ஆழத்தில்
அகதியாய் தொலைந்தும்
நம்பிக்கைக்கு வித்தாய் இருந்த நம் நட்பு...
அகண்டமாய் விரிந்த
உன் நட்புலகில் அரிதாய் மாற
கண் சிமிட்டும் நேரத்தில் வேற்றுவனாய் நிறுத்திவிட்டாய்...
நட்புக்கு இலக்கணமாய்
நம்பிக்கையாய் நானிருக்க
வார்த்தைகளால் சுட்டெரித்தாய்
வலி மாறா வடு இது தான் என்று
அறிவுக்கும் புகட்டிவிட்டாய்...
புன்னகையுடன் பயணிக்கிறேன்
என் வழி நடுவே
காத்திருக்கும் முற்களை
புஷ்பங்களாக பார்த்திட...
No comments:
Post a Comment