கடந்த வருடக் கவலைகள் யாவும்
கலைந்தே போகட்டும்..
வலியும் ரணமும் வாழ்க்கை என்ற
வார்த்தை மாறட்டும்..
மரத்துப் போன மனங்களில் கொஞ்சம்
ஈரம் துளிர்க்கட்டும்..
பட்டுப் போன இதயம் முழுதும்
பசுமை படரட்டும்..
புதிதாய் பிறக்கும் வருடம் நமக்கு
வசந்தம் வழங்கட்டும்...
எல்லாச் செயலும்
வெற்றி என்னும் இமயம் காணட்டும்..
வசந்தமும் வெற்றியும்
வாழ்நாள் முழுக்க
நம்மோடு கலந்தே இருக்கட்டும்....!
No comments:
Post a Comment