December 11, 2010

நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மீது கொண்ட காதலால் ....
இன்று உணர்வே இல்லாமல் தவிக்கிறேன் ..
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மீது வைத்த அன்பை
மறக்கவும் முடியவில்லை ...
மறைக்கவும் முடியவில்லை ...
இருந்தாலும் மறக்கின்றேன் ..
மறைகின்றேன் உன் முன்னிலையில் ..
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மனமோ வேறொரு சிந்தனையில்
நான் உன் சொந்தமாய் இருக்க விரும்புகிறேன் ...
காலம் வரும் வரை
என் உணர்வை மறைகிறேன் ...
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் நிழல் என் மீது விழ
என்னை மறைத்து உன்னை பார்க்க விரும்புகிறேன்
உன் நிழல் கூட என்னில் தொலையாதா படி பார்க்கின்றேன்...
நீ சொன்ன வார்த்தைக்காக !!

உன் மீது நான் கொண்ட காதல்
உன் மீது நான் வைத்த பாசம்
உன் மீது நான் காட்டும் அன்பு
உனக்கு புரியவில்லையா ?
எனக்கு நீ இல்லாவிட்டாலும் ...
என் நினைவுகளில் நீ வேண்டும் என்பதற்காகவே
உயிரில் கலந்த உன்னை ...
உணர்வில் நிலைத்த உன்னை ...
மனதுக்குள் சுமப்பேனே ...
இனி வரும் நொடி தோறும் !!

No comments:

Post a Comment