December 11, 2010

உன்னோடு நான் ...! ( உயிரே உன்னுள் நானாக நீ இருக்கும் நொடி )

உன்னோடு காலம்
முழுவதும் நான் வாழ்ந்திட
நாள் தவறாது கனவுகாண்கிறேன் ...
உன் தோளோடு தோள் சேர்த்து
நடந்திட நித்தமும் நினைக்கிறேன் ...
உன்னை என்றும்
என் கண்ணின் மணியாய்
காத்திட நிழலை கூட நேசிக்கிறேன் ...
உன் வாழ்க்கைத்
துணையாகிட வேண்டி
மனதில் தினமும் வேண்டுகிறேன் ...
உன் அரியணையில்
அரசி என்னும் சேவகியாய்
வீற்றிருக்க நினைத்திருப்பேன் ...
உன் தாகம் தீர்த்திடும் கனிரசமாக
நான் மாறி விழித்திருப்பேன் ...
ஒரு காவியமாகவே உன்னுள்
கலந்திட சித்திரமாய் நின்றிருப்பேன் ...
உன் கனவிலும் நானே வந்து
உன்னை தழுவிட
காதல் தாளம் போட்டிருப்பேன் ...
உன்னோடு நான் இணைந்து
உயிராக கலந்திருப்பேன்...!!

No comments:

Post a Comment