February 16, 2011

வலி


மனதில் பல வலிகள் இருந்தாலும்...
புன்னகை என்ற ஒரு பூவாள் 
மறைக்கும் சக்தி இருப்பதால் தானோ ..
மேலும் துன்பங்கள்
இன்பமாய் என்னை அடைகிறது...
வலிகளின் வாழ்விடம் நான் என்று

February 12, 2011

என் இனிய நட்பாக....

குறுஞ் செய்தியால்

மனம் நிரப்பும்

வித்தைக் கற்றவளே...

வார்த்தைகளில்

உன் உருவம் செதுக்கும்

உத்தமச் சிற்பியே...

அள்ளக் குறையாத

அன்பைச் சுரக்கும்

நட்பெனும்

அட்சயப் பாத்திரத்தில்

ஆண்பெண் எனும்

வேற்றுமை குறியீடு களைந்து

மதவாத சாதீய

மாச்சர்யங்கள் மறந்து

கரும்பில் இனிப்பாய்

கடலில் உப்பாய்

கலந்தோம் ஒன்றாய்...

வாழ்வு முழுதும்

நீடிக்கும் நட்பால்-நம்

வாழ்நாளே நீடிக்கும்..

உன் வார்த்தை சுமந்த

காற்றலைகூட

கண்ணீர் துடைக்கும் !

தவமாய் பெற்ற உன்னை

காலம் முழுவதும் காத்திருப்பேன்

என் இனிய நட்பாக....

காதல்

கல்லறை கூட அழகு தான்
உண்மையான காதல்
அமைதியாய் உறங்கும் போது

புத்தாண்டு வாழ்த்துக்கள்


கடந்த வருடக் கவலைகள் யாவும்
கலைந்தே போகட்டும்..
வலியும் ரணமும் வாழ்க்கை என்ற
வார்த்தை மாறட்டும்..
மரத்துப் போன மனங்களில் கொஞ்சம்
ஈரம் துளிர்க்கட்டும்..
பட்டுப் போன இதயம் முழுதும்
பசுமை படரட்டும்..
புதிதாய் பிறக்கும் வருடம் நமக்கு
வசந்தம் வழங்கட்டும்...
எல்லாச் செயலும்
வெற்றி என்னும் இமயம் காணட்டும்..
வசந்தமும் வெற்றியும்
வாழ்நாள் முழுக்க
நம்மோடு கலந்தே இருக்கட்டும்....!

வேதனை

வலிகளும் வேதனையும் 
தொடரும் போது
வார்த்தைகள் கூட தடுமாறும் ..
பாசத்தின் நடுவே
பிளவுகள் வந்தால்
சில பிழைகள் கூட 
பிரிவாகும்....

நட்பு

நொடிகளில் தொடங்கி..
வருடங்கள் சென்றாலும் ..
மாறாமல் மலர்ந்திருக்கும் ...
மங்காமல் பெருகி இருக்கும்
நம் நட்பு ..

January 11, 2011

அப்பாவுக்கு..

அன்பென்னும்  அகராதியில்
முதல் சொல்லும் நீ தானோ ...
அறிவை தந்தும்
ஆற்றலை ஈந்தும்
உருகும் உன்னத மெழுகும் நீ தானோ ...
இரும்பையே இதயமாய் கொண்டு
இன்னல்கள் பலகோடி வந்தபோதும்
கலங்கா தூணாய் நின்றவரும் நீ தானோ ...
ஈகையின் அர்த்தம்மாய்
மனித நேயத்தின் கடவுளாய்
வாழ்ந்தவரும் நீ தானோ ...
ஆசானாய், அன்னையாய் அன்பான நண்பனாய்
எண்ணற்ற அவதாரம் எனக்காக நீ எடுத்தாய்
என் நிலையில் மேலோங்க
தேய்பிறையாய் நீ தேய்ந்தாய் ...
உன் நிழலிலே வளர்ந்த ஒரு மரமாய்
துணிவோடும் துடிப்போடும்
நான் இருக்க....
துணையாக நீ வரவேண்டும்
வேடிக்கை பார்க்கும் வேற்றவனாய் அல்ல..
வாழ்க்கையை வழிநடத்தும்
பிரபஞ்சத்தின் ஒளியாய் ....



January 10, 2011

இயற்கை அன்னை..!!

எங்கும் காணும் 

இயற்கை அன்னையே
என் இதயம் போற்றும்
அனுதினம் உன்னையே
காற்றை தந்தாய்
நீரை தந்தாய்
அன்னம் தந்தாய்
உயிர்கள் வாழ
அனைத்தும் தந்தாய்
பாழும் மனிதனுக்கு
அறிவையும் தந்தாய்
அதனால் விளைந்ததோ
ஆயிரம் தொல்லை
தன் தலையில்
தானே போட்டான் கல்லை
அனைத்தும் தனதென
ஆளுமை கொண்டான்
தான் தான் வல்லவனென்று
ஆணவம் கொண்டான்
அறிவியல் கொண்டு
கருவிகள் செய்தான்
உன் வளங்களை சுரண்டி
வனங்களை அழித்தான்
மூச்சு காற்றை
நச்சு காற்றாய் நசித்தான்
எக்காலம் கடந்தாலும்
மக்காத குப்பைகளால்
மண்ணின் மடியின்
தண்ணீர் தொலைத்தான்
இத்தனை குற்றமும்
மொத்தமாய் செய்தவன்
சற்றும் வெட்கமின்றி
குற்றம் சாட்டினான் உன்னை
மழை பொய்த்தாய் நீயென
நிலம் பிரண்டாய் நீயென
தன்னையே மறந்தவன்
உன்னையே சபித்தான் ...!


முதல் காதல் ...

காவிய கண் அழகி..
உன் காகித போடோவும்
என்னை மயக்குதடி..
உன் சீன புன்னகையால் 
என்னை கவர்ந்து விட்டாய்....
இந்த வெண்ணிலவின் 
வெண்மையையும் உன் முக 
மலர்ச்சியால் தோற்கடிதாய்....
இன்று காலத்தின் விழும்பில் நீ..
உன் காதல் நெஞ்சின் மயக்கத்தில் நான்..
கோவத்தால் என்னை விரட்டி அடிக்காது 
உன் அன்பில் மட்டும் என்னை நெனைய
வைப்பாயா என் தேவதையே....!!

January 5, 2011

மறக்க முடியாத நினைவுகள்...

மறக்க முடியாத உன் நினைவுகள் 
நான் தூங்கும் போது என் 
கண்ணைத் தூங்க விடாமல் 
கலங்க வைக்கிறது 

இருந்தும் என் கண்கள் 
உன் நினைவுகளை 
சுமக்கவே தயாராகி விட்டது 

அன்று ஒரு நாள் 
பச்சைப் பசும் சோலைகள் நடுவே 
உன் மார்பில் தலை சாய்த்தேன் நான் 
அந்த நிமிடம் என்னை அறியாமலே 
காதல் அதிகரித்தது 

கண்ணா 
கண்ணாம்மூச்சி 
ஆட்டம் போல் என் 
வாழ்க்கையும் ஆகிவிட்டது 

மறக்கத்தான் நினைக்கிறேன் 
ஏனோ உன் நினைவுகள் 
மறுபடியும் வளர்கிறது 

உன்னை நான் தொலைத்த 
வேளையிலே என் வாழ்க்கையின் 
தேடல் தொடங்கியது 
இன்றுவரை தேடல் முடியாமல் 
தொடரவே செய்கிறது 

பள்ளியில் படித்த 
பாடத்தை விட 
காதல் பாடத்தை படித்ததே அதிகம் 
இருந்தும் காதல் பரீட்சையில் 
தோற்றுவிட்டேன் நான் 

காதலை மையமாக்கி நீ 
என் கனவில் 
நுழைந்தது ஞாபகம் இருக்கிறது 
அதே காதலை மையமாக்கி இன்று 
என்னை கைது செய்துவிட்டாயே 
அது ஏனோ என் இதயத்தைக் கொல்கிறது 

சோகக் கவிதையை எழுத 
மனம் இல்லை எனக்கு 
இருந்தும் என் பேனா சோகத்தை 
மட்டுமே எழுதத் துடிக்கிறது 

என் மனதில் உள்ள 
காயங்கள் மாறும் வரை 
காயம் கொண்ட கவிதைகளே 
தொடரும்