January 5, 2011

மறக்க முடியாத நினைவுகள்...

மறக்க முடியாத உன் நினைவுகள் 
நான் தூங்கும் போது என் 
கண்ணைத் தூங்க விடாமல் 
கலங்க வைக்கிறது 

இருந்தும் என் கண்கள் 
உன் நினைவுகளை 
சுமக்கவே தயாராகி விட்டது 

அன்று ஒரு நாள் 
பச்சைப் பசும் சோலைகள் நடுவே 
உன் மார்பில் தலை சாய்த்தேன் நான் 
அந்த நிமிடம் என்னை அறியாமலே 
காதல் அதிகரித்தது 

கண்ணா 
கண்ணாம்மூச்சி 
ஆட்டம் போல் என் 
வாழ்க்கையும் ஆகிவிட்டது 

மறக்கத்தான் நினைக்கிறேன் 
ஏனோ உன் நினைவுகள் 
மறுபடியும் வளர்கிறது 

உன்னை நான் தொலைத்த 
வேளையிலே என் வாழ்க்கையின் 
தேடல் தொடங்கியது 
இன்றுவரை தேடல் முடியாமல் 
தொடரவே செய்கிறது 

பள்ளியில் படித்த 
பாடத்தை விட 
காதல் பாடத்தை படித்ததே அதிகம் 
இருந்தும் காதல் பரீட்சையில் 
தோற்றுவிட்டேன் நான் 

காதலை மையமாக்கி நீ 
என் கனவில் 
நுழைந்தது ஞாபகம் இருக்கிறது 
அதே காதலை மையமாக்கி இன்று 
என்னை கைது செய்துவிட்டாயே 
அது ஏனோ என் இதயத்தைக் கொல்கிறது 

சோகக் கவிதையை எழுத 
மனம் இல்லை எனக்கு 
இருந்தும் என் பேனா சோகத்தை 
மட்டுமே எழுதத் துடிக்கிறது 

என் மனதில் உள்ள 
காயங்கள் மாறும் வரை 
காயம் கொண்ட கவிதைகளே 
தொடரும் 

No comments:

Post a Comment