January 5, 2011

மீண்டும்... மீண்டும்..

உன்னை நினைத்த பொழுதுகளில்
உன்னை மறக்கத்துடித்தேன்...
மறந்த பொழுதுகளில் நான் எங்கிருந்தேன்...
உன்னை மறக்க நினைத்து தோல்வி காணுகிறேன்..
தோல்வி வெற்றிக்காண படிக்கட்டுக்களாமே...?!
எத்தனைப் படிக்கட்டுக்களைக் கடந்து விட்டேன்...
ஒருமுறைத் திரும்பிப்பார்த்தும்
தலைசுற்றி சரிந்து விழுந்தேன்...
எத்தனை அடிகள் பட்டாலும் விழுவது உன் மடி என்றால் 
எத்தனை முறை வேண்டுமானாலும் விழலாம்...
ஆனால் உன் விழிகளில் கூட விழாத போது 
அழுகை பீரிட்டும் கண்ணீர் கட்டிப்பட்டு வெளிவர மறுக்கிறதே
என்னென்று சொல்வது...
ஏறத்துணிகிறேன்
உன்னை மறந்தே விடுவதென்று....
மீண்டும்... மீண்டும்... 

No comments:

Post a Comment