அன்பென்னும் அகராதியில்
முதல் சொல்லும் நீ தானோ ...
அறிவை தந்தும்
ஆற்றலை ஈந்தும்
உருகும் உன்னத மெழுகும் நீ தானோ ...
இரும்பையே இதயமாய் கொண்டு
இன்னல்கள் பலகோடி வந்தபோதும்
கலங்கா தூணாய் நின்றவரும் நீ தானோ ...
ஈகையின் அர்த்தம்மாய்
மனித நேயத்தின் கடவுளாய்
வாழ்ந்தவரும் நீ தானோ ...
ஆசானாய், அன்னையாய் அன்பான நண்பனாய்
எண்ணற்ற அவதாரம் எனக்காக நீ எடுத்தாய்
என் நிலையில் மேலோங்க
தேய்பிறையாய் நீ தேய்ந்தாய் ...
உன் நிழலிலே வளர்ந்த ஒரு மரமாய்
துணிவோடும் துடிப்போடும்
நான் இருக்க....
துணையாக நீ வரவேண்டும்
வேடிக்கை பார்க்கும் வேற்றவனாய் அல்ல..
வாழ்க்கையை வழிநடத்தும்
பிரபஞ்சத்தின் ஒளியாய் ....

முதல் சொல்லும் நீ தானோ ...
அறிவை தந்தும்
ஆற்றலை ஈந்தும்
உருகும் உன்னத மெழுகும் நீ தானோ ...
இரும்பையே இதயமாய் கொண்டு
இன்னல்கள் பலகோடி வந்தபோதும்
கலங்கா தூணாய் நின்றவரும் நீ தானோ ...
ஈகையின் அர்த்தம்மாய்
மனித நேயத்தின் கடவுளாய்
வாழ்ந்தவரும் நீ தானோ ...
ஆசானாய், அன்னையாய் அன்பான நண்பனாய்
எண்ணற்ற அவதாரம் எனக்காக நீ எடுத்தாய்
என் நிலையில் மேலோங்க
தேய்பிறையாய் நீ தேய்ந்தாய் ...
உன் நிழலிலே வளர்ந்த ஒரு மரமாய்
துணிவோடும் துடிப்போடும்
நான் இருக்க....
துணையாக நீ வரவேண்டும்
வேடிக்கை பார்க்கும் வேற்றவனாய் அல்ல..
வாழ்க்கையை வழிநடத்தும்
பிரபஞ்சத்தின் ஒளியாய் ....
No comments:
Post a Comment