சிறு பனித்துளியாய் என்னுள் நீ கலந்து விட்டாய்
காரணம் விலங்காது நிக்கையிலே
ஒரு புன்னகை சிந்தி என்னை மயங்க வைத்தாய்
நித்தம் பார்க்க துடிக்கையிலே
என் கண்முனே வந்து நீ இருந்தாய்
கவலையாய் நான் இங்கு இருக்கையிலே
கலங்கியே என்னுடன் நின்றிருப்பாய்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
என் மனம் முழுதும் நீயே பரப்பிருபாய்
மௌனம் என்ற ஒன்றை மட்டும்
அழகாய் வைத்து சிரித்திருப்பாய்
நட்பு என்ற என்னை மட்டும்
உன் வாழ்வில் நிலையாய் கொண்டு
ரசித்திருப்பாய் ...!!
No comments:
Post a Comment