August 3, 2012

தேடல்


என் தேடலில் கிடைத்த 
வைரங்கள் மீண்டும் மண்ணுலே 
கரித்துண்டாய் !!
ஏதும் அறியா உயிராய் 
மீண்டும் தொடர்கிறது  
என் வாழ்வின் தேடல்கள்  !!!

March 8, 2012

கலைந்து போன என் தூக்கத்தின் நினைவுகள்


கலைந்து போன என் தூக்கத்திற்கு
காரணம் அறிய விழிகின்றேன்
காதல் கனவு என்றால்
கதை பேசி தீர்திடுவேன்
கவலைகள் மலையாய் நிறைந்தால் கூட 
கண்ணீரில் கரைதிருப்பேன்
மௌனங்கள் மொழியாகி 
உணர்வுகளை வழிநடத்த
மலரும் நினைவுகள் 
என்னுள் சிறகை விரித்து பறப்பதை கண்டு 
கண் முன்னே மேடையிட்டு கனா காண்கிறேன் நான் 

கவிதை


சந்தோஷம் சங்கடம் 
இரண்டிலும் என்னை விட்டு 
பிரிந்து செல்லாத செல்ல குழந்தை நீ

என்னுள் எழுந்த குழப்பங்களுக்கு 
பல விதத்தில் ஆறுதல் சொல்லி
தோள் குடுத்த தோழி நீ

கண்கள் கலங்கி நிலையற்று நின்ற போதும் 
நிமிர்ந்து நின்று எதிர் நீச்சல் போட
கற்று தந்த அன்னை நீ

ஒவ்வொரு கவிஞன்
வாழ்விலும் நினைவிலும் வாழும் 
கவி என்னும் கரு நீ

கவிதையே 
இது கவி பாடும் பறவைகளின் 
அன்பு சமர்ப்பணம்.

கவிதையின் பிறப்பு

வான் முழுவதும்
நட்சத்திரக் கூட்டம்
பௌர்ணமி நிலவின் வெளிச்சம்
ஜில்லென்று வீசும் பூங்காற்று 
கண்களுக்கு அழகாய்
புன்னகை பூத்த சிரிப்பில் நான் 
காதல் பாடும் கீதங்களுக்கு 
ராகம் கூட்டும் என் மொழி எழுத்துகள் 
கவிதை எழுதும் சுழல் என்று 
பிடித்தவை என்னை சூழ்ந்து கொண்டாலும் 
என் கவியின் கருவாய்
பிடித்தவர்களும் என்னுடன் நினைவில் !!

பிரிவின் ஏக்கம்

முற்றிலும் தனிமை
முதுமையின் நிலைமை 
முழுவதாய் உணர்கிறேன் நான் இன்று
உறவென்று நீ
என் அருகினில் இல்லாத நாள்தோறும் 

October 14, 2011

காதல் ஹைக்கூ


நித்தமும் உன்னுடன் வாழ்கிறேன்..
உயிரிலே கலந்த காற்றாய்
நீ என்னுள் சூழ்ந்து கொண்ட நொடி தோறும் ...

மணமேடை மனவாசகம்


இராபகல் பாராது 
இமை பொழுதும் உன்னை எண்ணும் 
என் இதயத்துக்கு இன்னும் ஓர் ஆசை ...


அளவில்லா அன்பின் கடலில்
நித்தமும் வாழ்ந்தாலும் 
சிறு பொழுதேனும் 
உன் கை விரல் இணைப்பின் 
பிரியாமல் வாழ வேண்டும் என்று ...

காத்திருக்கிறேன் 
உன்னோடு கைகோர்த்து 
உலா வரும் அந்த ஒரு நொடிக்காக...!!

காதல்


உன் நினைவுகள் 
ரணமாய் என்னை தீண்டினாலும் 
என் கண்கள் 
பல நாட்களாய் காத்திருக்கிறது
உன் வருகைக்காக...

September 6, 2011

வாழ்க்கைப் பயணம்

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவ்லை
இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தால்
தொடங்கிய இடமும் தெரியவில்லை
தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது....
எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......

July 6, 2011

நினைவு..

என்றும் உன் நினைவு மட்டும் என் கண்ணில்
கரையா நிலவாய் இருக்க
கலக்கம் இன்றி காத்து இருக்கிறேன்
நீ என்னை கரம் பிடிக்கும் நொடிக்காக ...





உணர்வு
............................................................

தென்றலும் தீண்டவில்லை...
குளிர் மழையும் என்னை தொட வில்லை...
ஆனாலும் சிலிர்த்தேன்...
உன் பார்வை என் மேல் விழுந்ததால்...