September 6, 2011

வாழ்க்கைப் பயணம்

நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவ்லை
இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தால்
தொடங்கிய இடமும் தெரியவில்லை
தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது....
எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......

No comments:

Post a Comment