May 25, 2017

**மழைக்கொரு விண்ணப்பம்**

அக்னி தேவனை அரவணைக்க
அன்பாக வந்தாயோ.. இல்லை
அல்லல்படும் மக்களுக்கு 
அமிர்தமாய் வந்தாயோ..
சுட்டெரிக்கும் சூரியனுக்கு
சுடரேற்ற வந்தாயோ.. இல்லை
சருகாய் மடியும் சமானியனின்
சந்தோஷமாய் வந்தாயோ..
பளிச்சன்று பல்லை காட்டும்
பகலவனுக்கு பன்னீராய் வந்தாயோ.. இல்லை
பசுமை மைந்தர்களின் கண்ணீருக்கு
பால் வார்க்க வந்தாயோ..
விடியுமுன் விளையாட்டாயின்றி
வரவேற்பாய் வந்துவிடு..
துவண்டு போன உயிர்களுக்கு
துளியாய் வந்து புத்துயிராய் மாறிவிடு..
களம் காணும் உழவனுக்கு
கஞ்சி ஊற்றவாவது கண்ணீர் விடு..
காலம் கடந்தும் காத்திருக்கும் எங்களுக்கு
கருணையோடு விடைக்கொடு..

October 19, 2016

நா முத்துக்குமார்

மெய் மறந்து தான் போயிருந்தேன்
உன் பாடல் வரிகள்
ஒவ்வொன்றிலும்...
உவமைகளை அழகாய் கோர்த்து
உணர்வுகளை வார்த்தையால் இணைத்து
உறவுகளை ஒன்றிணைத்தாய்...
நீ சொன்ன கவியாவும்
நங்கூரமாய் எங்கள் மனதில்...
வலியாய் நீ மறைந்தாலும்
வார்த்தைகளால் என்றும் வாழ்வாய் எங்கள் நினைவுகளில்...

அவள்

கருவாய் உயிர் பெற்ற
நாள் தொடங்கி
கல்லறை உறக்கம் காணும் வரை
கண்ணீரையும்
கலக்கத்தையும் நிறைவாய்
கொண்டவள் இவள்...
பிஞ்சாய்
பிறந்த நாள் தோறும்
பெண் பிள்ளை தூற்றலை
பெற்றவள் இவள்...
கள்ளமில்லா சிரிப்பிலும்
கால் கொலுசு சத்தத்திலும்
பெற்றவளை
மகிழ்விற்கும் மழலை இவள்...
காலத்தின் ஓட்டத்தில்
மழலையில் இருந்து மங்கையாய்
மலர் சூடிய மலை நாட்டு இளவரசி இவள். . .
பருவங்கள் மாற மாற
உணர்வுகளின் உபாதைகளாய்
உடலிலும் மனதிலும்
மாற்றங்கள் வெளிபட
கலைப்பற்று வாடும் பூமகள் இவள்...
வரமாய் பெற்ற கர்ப்பகத்தை
வலியால் உணர்ந்தும்
மனதால் மெலிந்தும்
பொறுத்து கொள்ளும் பூமாதேவி இவள். . .
மணம் கொண்ட மணாளனுக்கு
மலராய் பூத்தும்
வாழவந்த வீட்டிற்கு பூ மணத்
தென்றலாய் வீசும்
வசந்தம் இவள். . .
போற்றலும் தூற்றலும்
எதுவாயிருப்பின்
பெண்ணாய் பிறந்த பிறவிபலனை
கருவாய்
சுமக்கும் அன்னை இவள். . .
பன்முக
பராசக்தியாய்
பல பாவனைகள் கொண்ட
இத்தனை இவள்களும்
ஒரு உயிராய்
இருக்கிறாள்
அவள் என்ற தோற்றத்தில். . .

மொழி

'சேறு' என்ற வார்த்தையை உருவாக்கி, 
அதில் 
"கால்" வைத்தால் தான் 
'சோறு' ஆகும்
எனும் நுட்பமான மொழி
'தமிழ்' ! :)

October 17, 2016

நட்புக்குள்ளே...


அன்புக்கு பாத்திகட்டி
அசைவில்லா நட்புக்கு
வேரூன்றி நீயும் நின்றாய்
நான் போடும் பாதைகளுக்கு பகட்டிரவிலும் பளிச்சிட்ட வெளிச்சமாய்
பல தூரம் நீ நடந்தாய்...

நட்பெனும் அதிகாரத்தில்
'அ'கரமாய் நிலைத்தும்
ஆழ்கடல் ஆழத்தில்
அகதியாய் தொலைந்தும்
நம்பிக்கைக்கு வித்தாய் இருந்த நம் நட்பு...

அகண்டமாய் விரிந்த
உன் நட்புலகில் அரிதாய் மாற
கண் சிமிட்டும் நேரத்தில் வேற்றுவனாய் நிறுத்திவிட்டாய்...

நட்புக்கு இலக்கணமாய்
நம்பிக்கையாய் நானிருக்க
வார்த்தைகளால் சுட்டெரித்தாய்
வலி மாறா வடு இது தான் என்று
அறிவுக்கும் புகட்டிவிட்டாய்...

புன்னகையுடன் பயணிக்கிறேன்
என் வழி நடுவே
காத்திருக்கும் முற்களை
புஷ்பங்களாக பார்த்திட...

கடலை சட்னி

கருமணல் காட்டுக்குள்ளே
கொத்து கொத்தாய் விளைஞ்ச முத்து..
கருப்புச் சட்டி வாணலியில்
ஊர் மணக்க தாளமிட..
கொப்பரக்காய் கொரகொரப்பு
கொஞ்சம் வந்து நா சுவைக்க..
காரமாய் நீ சேர்த்த
வற்றல் எல்லாம் வாய் எரிக்க..
அத்தை மகள் நீ வந்து
இலை போட்டு பரிமாற..
உன் கை பட்ட கடலை சட்னி
நாவில் பட்டு மெய் மறக்க
தடம் பார்த்து காத்திருந்தேன்
இன்னும் ஒரு இட்லிக்காக...

Image may contain: one or more people

May 2, 2014

பெருமை

மழலை சாரலை மொழியாய் கொண்டு 
நீ விழிக்கும் நொடித்தொறும் 
துயில் இழந்து காத்திருக்கும் தாயின் முகம் 
சொர்க்கம் என்றாலும்
வான் ஒங்கும் பெருமைகளை நீ அள்ளி கூவித்து புகழ் பாடினாலும்
உள்ளம் மகிழ்ந்து கண்கள் குளிரும்
உன் மகள் பிஞ்சுகரம் கொண்டு உன் கரம் பிடிக்கையில் !!


November 24, 2013

மீண்டும் மலர்ந்தேன் !!


நாட்குறிப்பில் எழுதப்படாதா என் நாட்கள் கூட
நகைத்தே சென்றது ....
தனிமையில் உலா வரும் வெண்ணிலவை
போன்றது உன் விதியென்று ...
செல்லா காசாய் மறைந்த என் எழுத்துகளும்
செவி கொண்டு வசை பாடியது  ..
" புத்துணர்ச்சி நிறைந்த பூக்களாய்
புதுமை நிறைந்த முத்துகளாய்
இனிமை நிரம்பிய செந்தமிழின்
கவி கொண்டு தொடுத்திடுவாய்
உன்  கவிதைகளை பூ மாலையாக "

September 4, 2012

முதியோர் இல்லம்

நிலை தள்ளாடும் முதுமையிலும்
நம்பிக்கை என்ற உயிரோடு
நினைவுகளை மட்டும் உறவாய் எண்ணி
மனிதனாய் முகத்தால் புன்னகைத்து
மனதோடு கண்ணீருமாய் வாழும்
மலை கோவில் தெய்வங்கள்
"முதியோர் இல்லம்" என்ற கோவிலுக்குள் ..

August 3, 2012

தேடல்


என் தேடலில் கிடைத்த 
வைரங்கள் மீண்டும் மண்ணுலே 
கரித்துண்டாய் !!
ஏதும் அறியா உயிராய் 
மீண்டும் தொடர்கிறது  
என் வாழ்வின் தேடல்கள்  !!!