July 7, 2017

என்னுள் எழும் சங்கடங்களை
சல்லடையாய் நீக்கி
சந்தோஷத்தை தந்தவன் நீ..
ஒற்றை பார்வை போதும்
உன்னை அன்பாய்
என்னிடம் அழைத்து வர...
அலைந்து தொலைந்தாவது
கண்டு கொள்வாய்
உன்னவள் இருக்கும் இடத்தை..
அள்ளி அணைத்து கொள்ள தோன்றும்
அன்பாய் நீ அருகினில் வரும்
நொடித்தோறும்..
தினந்தோறும் சந்தித்த நாட்கள்
மாறி மாதம் ஒருமுறை சந்தித்தாலும்
மங்காமல் ஒளிக்கிறது உன் அன்பு என்றும் ...
சிறு பிள்ளையாய் தான்
மாறி போனேன்
சீண்டி நீ ஆடும் ஆட்டத்தில்...
கள்ளமில்லா உன் அன்பில்
கரைந்தே போகிறேன்
கண் இமைக்கும் நொடித்தோறும்..
கலக்கத்தோடு காத்திருக்கிறேன்
உன் அணைப்பில்
என் சோகத்தை கலைத்திட..

- சுகி



என் வீட்டு செல்லப் பிராணியின் நினைவில்.. Image may contain: one or more people, people sitting, dog, text and outdoor

No comments:

Post a Comment