செங்காந்தள் பூப்போலே
செம்மேனி உடையவளோ
ஆம்பல் நிறம்போலே
அள்ளித்தரும் தாரகையோ
அனிச்சம் பேர் இவளோ
அன்புக்கு சான்றிவளோ
காற்றாலை போல் வீசும்
குவளை மணம் கொண்டவளோ
குறிஞ்சி பூப்போலே
கொஞ்சிடும் பைங்கிளியோ
வெட்சி மலராலே
வெட்கத்தில் திளைப்பவளோ
செங்கோடுவேறினை போல்
செழுமையில் பிறந்தவளோ
தேனிலே கலந்த புளிப்பாய்
தேமாவாய் திகள்பவளோ
மலர்சூடும் மன்னனுக்கு
மணிசிகையாய் வாழ்பவளா
உந்தூழ் காம்பை போல்
உறுதுணையாய் நிற்பவளோ
கூவிளம் மலர்போலே
கூர்நோக்காய் காண்பவளோ
ஏறுழம் பூப்போலே
எதிரியினை எரிப்பவளோ
சுள்ளிக்கு ஈடுஇணையாய்
சுற்றத்தோர் ரசிப்பவளோ
கூவிரம் பலன்போலே
குடும்பத்தை காப்பவளோ
வடவனமாய் இல் நின்று
பிணித்தானாய் போப்பவளோ
வாகை மலர்சூடி
மன்னவனை அழைப்பவளோ
வான் பூங் குடசமாய்
வறுமையிலும் வெல்பவளா
எருவைபுல்போலே
எறும்பாய் உழைப்பவளோ
சங்குப்பூக்கள்
செருவிளை கருவிளை போல்
இன்முகத்து பைரவியாய்
பலம் சேர்க்கும் பைங்கிளியோ
செம்மேனி உடையவளோ
ஆம்பல் நிறம்போலே
அள்ளித்தரும் தாரகையோ
அனிச்சம் பேர் இவளோ
அன்புக்கு சான்றிவளோ
காற்றாலை போல் வீசும்
குவளை மணம் கொண்டவளோ
குறிஞ்சி பூப்போலே
கொஞ்சிடும் பைங்கிளியோ
வெட்சி மலராலே
வெட்கத்தில் திளைப்பவளோ
செங்கோடுவேறினை போல்
செழுமையில் பிறந்தவளோ
தேனிலே கலந்த புளிப்பாய்
தேமாவாய் திகள்பவளோ
மலர்சூடும் மன்னனுக்கு
மணிசிகையாய் வாழ்பவளா
உந்தூழ் காம்பை போல்
உறுதுணையாய் நிற்பவளோ
கூவிளம் மலர்போலே
கூர்நோக்காய் காண்பவளோ
ஏறுழம் பூப்போலே
எதிரியினை எரிப்பவளோ
சுள்ளிக்கு ஈடுஇணையாய்
சுற்றத்தோர் ரசிப்பவளோ
கூவிரம் பலன்போலே
குடும்பத்தை காப்பவளோ
வடவனமாய் இல் நின்று
பிணித்தானாய் போப்பவளோ
வாகை மலர்சூடி
மன்னவனை அழைப்பவளோ
வான் பூங் குடசமாய்
வறுமையிலும் வெல்பவளா
எருவைபுல்போலே
எறும்பாய் உழைப்பவளோ
சங்குப்பூக்கள்
செருவிளை கருவிளை போல்
இன்முகத்து பைரவியாய்
பலம் சேர்க்கும் பைங்கிளியோ
No comments:
Post a Comment