பிள்ளையாரே பிள்ளையாரே
பிறந்தநாளாம் உமக்குஇன்னிக்கு
முதல் கடவுள் முகத்தானே
முதல் வாழ்த்து நானும் சொல்லேன்
எருக்கம்பூ நாயகனே
இரக்கம் கொஞ்சம் காட்டுமய்யா
எழுத்துப்பிழை கூடாதுனு
சுழி போட்டு துவங்க போறேன்
புத்தாடை போடணுமுன்னு
பட்டாடை கேப்பீரோ
பலவண்ண மெழுகேத்தி
பகட்டா தான் மகிழ்வீரோ
கரிமுகத்து கணபதியே
கடைதிறக்க வாரீரோ
நான்செஞ்ச தின்பண்டம்
திகட்டும் வரை உண்பீரோ
உப்பென்ன இனிப்பென்ன
விதவிதமா உங்கத்தாரேன்
கொலு கொலு புள்ளைக்கு
கொழுக்கட்டை புடிச்சு தாரேன்
கனியுண்ணும் ஆசையிலே ஆறுமுகனை
மலையேத்திய ஐந்து கரத்தானே
பால்கனி படைச்சிருக்கேன்
பானைவயிறு நிரம்பும்வரை வயிறார உண்ணும்மய்யா
முருகனுக்கு மூத்தோனே
முரண்டுபிடிக்காம வாருமய்யா
நீ போட்ட முடியெல்லாம்
நீக்கத்தான் வேணும்மய்யா
சதுர்த்தி நாயகனே
சங்கடத்தை தீர்க்கத்தான் நீயும் இங்கு வாரீரோ
சங்கத்தமிழ் வளர்த்த மண்ணில்
செம்மொழி செழிக்க செய்வீரோ
- சுகி

முக்கண்ணன் மூத்த புதல்வனருள் பூரணமாய் கிட்டும் !
ReplyDeleteநன்றி என் தங்கையே :)
Delete