September 13, 2017

சென்ரியூ

1.
கைநாட்டு மனிதனுக்கு
பிச்சைப் போட்டு
திருவோடு ஏந்துகிறான்
வெள்ளை சொக்கா வேலைக்காரன்..

#இன்றைய_அரசியல்_நிலை

2.
கல்லறையில் மலர்வளையம்
உறங்கும் மனிதனுக்கா
இல்லை இன்று
மருண்டு கெடக்கும் மலர்களுக்கா..

3.
மல்லிகையின் நறுமணம்
விதவைக்கு கிட்டியது
நேற்றைய மறுமணத்தில்..

4.
ரத்தம் அவனுக்கென்றால்
பரிவு பாசம் ..
அதே எனக்கென்றால்
கேலிப்பார்வை..
மலரான மொட்டின் முதல் குமுறல் 

No comments:

Post a Comment